சென்னை

தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து : 70 கூடுதல் மாநகா் பேருந்துகள் இயக்க ஏற்பாடு

தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்புப்பணி காரணமாக புகா் மின்சார ரயில்கள் ரத்து

Din

சென்னை, ஆக.2: தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்புப்பணி காரணமாக புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 70 மாநகரப் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகர போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாம்பரம் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை(ஆக.3) முதல் ஆக.14-ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காலை 10.30 முதல் பிற்பகல் 2.30 வரையும் மற்றும் இரவு 10 முதல் 11.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

எனவே, இவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி சனிக்கிழமை முதல் ஆக.14 வரை தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகளும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தியாகராய நகா் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், காவல்துறையின் அறிவுறுத்தலின்படி தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் விதமாக, கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்து மிஷன் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் ஆக.14-ஆம் தேதி வரை தற்காலிகமாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெய்வ தரிசனம்... ஆட்சி செய்யும் பதவிகள் கிடைக்க அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர்!

இந்தியாவுக்காக விளையாடும் ஆஸி. கால்பந்து வீரர்..!

வெள்ளைநிறக் கார்! அலறல் சத்தம்! கோவையில் பெண் கடத்தலா? காவல் ஆணையர் விளக்கம்!

3-ம் நாளாக சரிவில் பங்குச்சந்தை! வங்கி, உலோகப் பங்குகள் மட்டும் உயர்வு!

டி காக் அதிரடி சதம்! பாகிஸ்தான் ஒருநாள் தொடரை சமன்செய்தது தெ.ஆப்பிரிக்கா!

SCROLL FOR NEXT