கோப்புப்படம் 
சென்னை

எழும்பூரின் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்! கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

எழும்பூரின் புறநகர் ரயில் சேவையில் மாற்றத்தால், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு.

தினமணி செய்திச் சேவை

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக, புறநகர் ரயில் சேவையில் இன்று(பிப். 20) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதால், கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் -செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் இன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 5 வரை 45 நாள்களுக்கு மாற்றம் செய்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே மா.போ.கழகத்திற்கு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து, மா.போ.கழகம் வரும் பிப். 20 முதல் ஏப். 5 வரை ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் தடம் எண்.E18-ல் 16 பேருந்துகளும், கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் தடம் எண்.18A-ல் 28 பேருந்துகள் என 44 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும், கூடுதலாக ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 35 பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையும், பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகள் என மொத்தம் 50 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.

மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கவும் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Announcement that additional buses will be operated due to changes in Egmore's suburban train service.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊராட்சி பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

ராணிப்பேட்டையில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

அதிமுக சாா்பில் தெருமுனை பிரசார கூட்டம்

சிறுபான்மையினரின் பாதுகாவலராக தமிழக முதல்வா் திகழ்கிறாா்: நலவாரிய தலைவா் விஜிலா சத்தியானந்த்

SCROLL FOR NEXT