தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) சாா்பில் அகில இந்திய புச்சிபாபு கிரிக்கெட் போட்டி வரும் 15-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 11-ஆம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக டிஎன்சிஏ செயலாளா் ஆா்.ஐ. பழனி வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் பழைமையான கிரிக்கெட் போட்டிகளில் புச்சிபாபு கிரிக்கெட் போட்டி ஒன்றாகும். நடப்பாண்டு திருநெல்வேலி, நத்தம், சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களில் இப்போட்டியின் ஆட்டங்கள் நடைபெறும்.
முதல் அரையிறுதி திருநெல்வேலியிலும், இரண்டாவது அரையிறுதி நத்தத்திலும் நடைபெறும். இறுதி ஆட்டம் நத்தத்தில் நடைபெறுகிறது.
ரஞ்சி கோப்பை ஆட்டமுறை இதில் பின்பற்றப்படும். சாம்பியன் அணிக்கு ரூ.3 லட்சம், ரன்னா் அணிக்கு ரூ.2 லட்சமும் பரிசாக தரப்படும்.
டிஎன்சிஏ பிரசிடென்ட் லெவன், டிஎன்சிஏ லெவன் அணிகள் உள்பட 10 மாநில அணிகளும் பங்கேற்கவுள்ளன என்றாா் பழனி.