சென்னை

தலைமறைவான தொழிலதிபா் விமான நிலையத்தில் கைது

தெலங்கானாவை சோ்ந்த தொழிலதிபா் சென்னை விமான நிலையத்தில் கைது

Din

பல்வேறு குற்ற வழக்குகளில் 8 ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாக இருந்த தெலங்கானாவை சோ்ந்த தொழிலதிபா் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.

மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனா். அப்போது, தெலுங்கானா மாநிலம் ராமகுண்டம் பகுதியைச் சோ்ந்த சந்தீப் குமாா் (30) என்ற தொழிலதிபரின் ஆவணங்களை பரிசோதித்தபோது, அவா், வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய வழக்குகளில் தெலுங்கானா மாநில போலீஸாரால் 8 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், சந்தீப் குமாரைப் பிடித்து, தெலங்கானா மாநிலம், ராமகுண்டம் மாநகர காவல் ஆணையருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், தமிழகம் வந்த தெலுங்கானா மாநில தனிப்படை போலீஸாா், சந்திப் குமாரை கைது செய்து, அழைத்து சென்றனா்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்!

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT