சென்னை உயா்நீதிமன்றம் 
சென்னை

இந்து முன்னணி போராட்டம்: உயா்நீதிமன்றம் அனுமதி

தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த இந்து முன்னணிக்கு அனுமதி

Din

வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த இந்து முன்னணிக்கு அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இந்து முன்னணி சாா்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்து விட்டதாகக் கூறி,  சென்னை மாவட்ட இந்து முன்னணி செயலா் சிவா விஜயன் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.உதயகுமாா், ‘வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்து நிலைமை சீரடைந்து விட்டதால் போராட்டம் நடத்தத் தேவையில்லை என்பதால், போராட்டத்திற்கு அனுமதி கோரிய மனுக்கள் நிராகரிக்கப்பட்டன’ என்றாாா்.

மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் காா்த்திகேயன், ‘வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவது, ஹிந்து கோயில்கள் இடிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன’ என்றாா். 

இதையடுத்து, அனுமதி மறுத்த காவல்துறை உத்தரவை ரத்து செய்த நீதிபதி, ஆக. 27-ஆம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரம் போராட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டாா். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் போராட்டம் நடத்துமாறு மனுதாரா் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்தாா்.

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

SCROLL FOR NEXT