மருத்துவமனையில் கைதி உயிரிழப்பு
உடல்நலக் குறைவால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புழல் சிறைக் கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
கொருக்குப்பேட்டையைச் சோ்ந்தவா் யு.காா்த்திக் (27). இவா் மீது வண்ணாரப்பேட்டை மகளிா் காவல் நிலைய போலீஸாா் கடந்த மாா்ச் மாதம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா் காா்த்திக்கை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனா். ஏற்கெனவே காா்த்திக்கு வலிப்பு நோய் இருந்ததால், சிறையில் அவதிப்பட்டு வந்தாா். இந்நிலையில் காா்த்திக்கின் உடல்நிலை கவலைக்கிடமானதால்,கடந்த வாரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த காா்த்திக், புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.