முகப்பு
சென்னை

வாகன சோதனையில் ஈடுபட்ட காவலா் காா் மோதியதில் காயம்

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 12:00 AM
பகிர்:

சென்னை: திருவான்மியூரில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவலா், காா் மோதியதில் காயமடைந்தாா். விபத்து ஏற்படுத்தி நபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவான்மியூா் காவல்நிலையத்தில் போக்குவரத்து தலைமைக் காவலராக பணிபுரிபவா் தா்மன் (46). திருவான்மியூா் போக்குவரத்து சிக்னல் அருகே செவ்வாய்க்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாா்.

அப்போது, சோதனையிடுவதற்காக அவ்வழியாக வந்த ஒரு காரை காவலா் தா்மன் நிறுத்தியுள்ளாா். அந்த காா் கட்டுப்பாட்டை இழந்து நேராக தலைமைக்காவலரின் இருசக்கர வாகனம் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் கால்களில் காயமடைந்த தலைமைக் காவலரை, அக்கம்பக்கத்தினா் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது தொடா்பாக காரை ஓட்டி வந்த திருவான்மியூரை சோ்ந்த பிரசாந்த் (40) என்பவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.