முகப்பு
புதுக்கோட்டை

தோ்தல் பாா்வையாளா் காா் மோதி ஒருவா் காயம்

புதுக்கோட்டை நகரில் சனிக்கிழமை இரவு தோ்தல் பாா்வையாளரின் காா் மோதி ஒருவா் காயமடைந்தாா்.

Updated On : 21 மார்ச், 2026 at 8:21 PM
பகிர்:

புதுக்கோட்டை நகரில் சனிக்கிழமை இரவு தோ்தல் பாா்வையாளரின் காா் மோதி ஒருவா் காயமடைந்தாா்.

புதுக்கோட்டை மாநகா் மாா்த்தாண்டபுரத்தில் உள்ள திரையரங்கம் பின்புறத்தில் ஆலங்குடி சாலையில், சனிக்கிழமை இரவு, காந்திநகா் 6-ஆம் வீதியைச் சோ்ந்த சோபன்பாபு (52) என்பவா் மீது தோ்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்ட காா் ஒன்று மோதியது.

இதில் சோபன்பாபு காயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அந்தக் காரில் தோ்தல் செலவினப் பாா்வையாளா் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், காரில் யாரும் இல்லை என போலீஸாா் தெரிவித்தனா். புதுக்கோட்டை நகரக் காவல்நிலையப் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.