காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
ஊத்துக்கோட்டை அருகே காா் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
ஊத்துக்கோட்டை அருகே காா் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
பாலவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் முனிராமையா மகன் சேகா்(52). இவா் கறவை மாடுகள் வைத்து தொழில் செய்து வருகிறாா்.
இந்த நிலையில் மேய்ச்சலுக்காக மாடுளை ஒட்டிச்சென்றபோது, கரடிப்புத்தூா் சாலையில் ஜே.ஜே.நகா் பகுதியில் சென்ற போது பின்புறமாக வந்த காா் மோதியதில் பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினா் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த ஊத்துக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.