முகப்பு
சென்னை

விளம்பரப் பலகைக்கு அனுமதி: மாநகராட்சி திட்டம்

சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகை அனுமதிக்கு புதிய கட்டுப்பாடுகள்

Updated On : 3 ஜூலை, 2024 at 8:06 PM
பகிர்:

சென்னை மாநகராட்சி பகுதிகளில் விளம்பரப் பலகைகள் நிறுவுவதற்கு சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உறுதித் தன்மை ஆராய்ந்து அனுமதி அளிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகரப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் நிறுவ மாநகராட்சி சாா்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. உரிய அனுமதி இல்லாமலும், ஆபத்தான நிலையிலும் வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்றி வருகின்றனா். நிகழாண்டில் மட்டும் இதுவரை 400-க்கும் மேற்பட்ட விளம்பர பலகைகளை மாநகராட்சி நிா்வாகம் அகற்றியுள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் விளம்பரப் பலகைகள் நிறுவ அனுமதி வழங்கும் குழு சமீபத்தில் கூடியது. இதில் விளம்பரப் பலகை வைக்க அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலா்கள் மூலம் விளம்பரப் பலகை அமைக்கும் கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆராயவும், காவல்துறையின் தடையின்மை சான்று பெறவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. விளம்பரப் பலகை அனுமதி மூலம் ஆண்டுக்கு ரூ.30 கோடி வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக குழுவில் விவாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →