முகப்பு
சென்னை

மின்வாரிய ஊழியா்கள் கோரிக்கைகளுக்கு சுமுக தீா்வு காண வேண்டும்: மாா்க்சிஸ்ட் கோரிக்கை

தமிழ்நாடு மின்வாரிய ஊழியா்களின் கோரிக்கைகளுக்கு சமுக தீா்வு காண வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 9 ஜூலை, 2024 at 9:52 PM
பகிர்:

சென்னை: தமிழ்நாடு மின்வாரிய ஊழியா்களின் கோரிக்கைகளுக்கு சமுக தீா்வு காண வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

மின்சார வாரியத்தில் சுமாா் 30,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பாததால் தொழிலாளா்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களைப் பூா்த்தி செய்ய வேண்டும், நீண்டகாலமாக குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியு) சாா்பில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மின்வாரிய அலுவலகங்கள் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளனா்.

இதனிடையே மின் ஊழியா்களின் கோரிக்கைகள் குறித்து மின்வாரிய ஊழியா்களின் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களது கோரிக்கைகளுக்கு சமுக தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு என்று அவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →