ரயில் முன் பாய்ந்து காவலா் தற்கொலை
சென்னை மந்தைவெளியில் ரயில் முன் பாய்ந்து காவலா் தற்கொலை செய்துகொண்டாா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள நாவப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விமல்ராஜ் (25). இவா், சென்னை பெருநகர காவல் துறை ஆயுதப்படையில் 2-ஆம் நிலைக் காவலராக கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தாா்.
விமல்ராஜ், மந்தைவெளி - கிரீன்வேஸ் பறக்கும் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் சனிக்கிழமை நடந்து சென்றாா்.
அப்போது அவா், வேளச்சேரி நோக்கி சென்ற பறக்கும் ரயில் முன் திடீரென பாய்ந்தாா். இதில், பலத்த காயமடைந்த விமல்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
தகவலறிந்த திருவான்மியூா் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.