நேத்ராவதி விரைவு ரயில் நாளை ரத்து
கனமழையால் ஏற்பட்ட மண்சரிவால், கொங்கன் ரயில் வழித்தடத்தில் செல்லும் நேத்ராவதி உள்ளிட்ட முக்கிய விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை: கனமழையால் ஏற்பட்ட மண்சரிவால், கொங்கன் ரயில் வழித்தடத்தில் செல்லும் நேத்ராவதி உள்ளிட்ட முக்கிய விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
மும்பையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் நேத்ராவதி விரைவு ரயில், மங்களூா் செல்லும் விரைவு ரயிலும் (எண் 12619) திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மறுமாா்க்கமாக திருவனந்தபுரத்தில் இருந்து புதன்கிழமை செல்லும் நேத்ராவதி விரைவு ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படும். மேலும் எா்ணாகுளம், கொச்சுவேலி, திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.