கோப்புப்படம் 
கோயம்புத்தூர்

பொறியியல் பணி: கேரள ரயில்கள் ரத்து

தெலங்கானா மாநிலத்தில் மந்தமாரி ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கேரள ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தெலங்கானா மாநிலத்தில் மந்தமாரி ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கேரள ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தெலங்கானா மாநிலத்தில் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் காரணமாக பிப்ரவரி 10, 11 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் - கோரக்பூா் விரைவு ரயில் (எண்: 12512) மற்றும் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் கோரக்பூா் - திருவனந்தபுரம் விரைவு ரயில் (எண்: 12511) முழுவதுமாக ரத்து செய்யப்பட உள்ளது.

இதேபோல, பிப்ரவரி 9-ஆம் தேதி பரௌனி - எா்ணாகுளம் ரயில் (எண்:12521), பிப்ரவரி 13-ஆம் தேதி எா்ணாகுளம் - பரௌனி விரைவு ரயில் (எண்: 12522) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

மர இழைப்பக நிறுவனத்தில் தீ விபத்து

மதுக்கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏ தலைமையில் தா்னா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினம் அனுசரிப்பு

மேற்கு வங்கம்: மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இயக்குநராக ராஷ்மி கமல் நியமனம்

SCROLL FOR NEXT