சேது விரைவு ரயில் படம்: தெற்கு ரயில்வே
தமிழ்நாடு

சேது விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்!

சேது விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சேது விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதேபோல ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சேது விரைவு ரயில் தாம்பரம் வரை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சேது விரைவு ரயில், பிப். 19 ஆம் தேதி முதல் ஏப். 5 ஆம் வரை தாம்பரம் வரை நிறுத்தப்படும் என்றும், தாம்பரத்துக்கு காலை 6.35 மணிக்கு வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சேது விரைவு ரயில், பிப். 20 ஆம் தேதி முதல் ஏப். 6 ஆம் வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும். தாம்பரத்தில் இருந்து இரவு 6.25 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

எனவே, பயணிகள் தங்கள் பயணத்தை இதற்கேற்ப திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

Southern Railway has announced that the Sethu Express train operating between Lumbpur - Rameswaram will operate from Tambaram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய ரஜினி!

ஸ்டாலின் தலைமையேற்றால் ராகுல் பிரதமராவார்! காங்கிரஸ் மூத்த தலைவர்

த்ரிஷா பற்றி பேச்சு: வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸிலேயே பாகிஸ்தான் தோற்றுவிட்டது: வாகர் யூனிஸ்

ராகுல் சொல்லி மாணிக்கம் தாகூர் பேசுகிறாரா ?

SCROLL FOR NEXT