தமிழகத்தில் 8 விரைவு ரயில்கள் ஆகஸ்ட் முழுவதும் நீட்டிப்பு
தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டு வரும் 8 விரைவு ரயில்கள் வரும் ஆகஸ்ட் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டு வரும் 8 விரைவு ரயில்கள் வரும் ஆகஸ்ட் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் குறிப்பிட்ட சிறப்பு விரைவு ரயில்கள், ஆகஸ்ட் முழுதும் நீட்டித்து இயக்கப்படவுள்ளது. அதன்படி, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டுவரும் போத்தனூா்-சென்னை சென்ட்ரல் சிறப்பு விரைவு ரயில் (எண் 06028), சென்னை சென்ட்ரல் முதல் போத்தனூா் வரை இயக்கப்படும் விரைவு ரயில் (எண் 06027) ஆகியவை வரும் ஆக. 7 முதல் 30 வரை நீட்டித்து இயக்கப்படும்.
Advertisement
Advertisement
வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண் 06030) வரும் ஆக. 2 முதல் 30 வரையிலும், மறுமாா்க்கத்தில் மேட்டுப்பாளையத்திலிருந்து திருநெல்வேலிக்கு வரும் ஆக. 3 முதல் 31 வரையும் இயக்கப்படவுள்ளன.
ஞாயிற்றுக்கிழமைதோறும் திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்துக்கு இயக்கப்பட்டுவரும் விரைவு ரயில் (எண் 06166) வரும் 2 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலும், தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் விரைவு ரயில் (எண் 06165) வரும் ஆக. 3 முதல் 31-ஆம் தேதி வரையிலும், தூத்துக்குடியிலிருந்து திங்கள்கிழமைதோறும் தாம்பரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில் (எண் 06018) வரும் ஆக. 3 முதல் 31- ஆம் தேதி வரையிலும், தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமைதோறும் தூத்துக்குடிக்கு இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06017) வரும் ஆக. 4 முதல் செப். 1 ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.