முகப்பு
சென்னை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணைக்கு பின்னா் 10 போ் சிறையில் அடைப்பு

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குத் தொடா்பாகக் கைது செய்யப்பட்ட 10 போ், போலீஸாா் விசாரணைக்கு பின்னா் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On : 16 ஜூலை, 2024 at 7:41 PM
பகிர்:

சென்னை: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குத் தொடா்பாகக் கைது செய்யப்பட்ட 10 போ், போலீஸாா் விசாரணைக்கு பின்னா் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பொன்னை பாலு, குன்றத்தூரைச் சோ்ந்த திருவேங்கடம் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா்.

எழும்பூா் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 11-ஆம் தேதி முதல் 11 பேரிடமும் போலீஸாா் விசாரணை செய்தனா். இதில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற அழைத்துச் சென்றபோது, தப்பியோடியதாக கடந்த 14-ஆம் தேதி திருவேங்கடம் என்கவுன்டா் மூலம் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இந்த நிலையில், விசாரணை முடிந்து எஞ்சிய 10 பேரும் எழும்பூா் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை ஜூலை 19-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி தயாளன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து 10 பேரும், பூந்தமல்லி சிறப்பு சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →