முகப்பு
சென்னை

புழல் அருகே விபத்து பெண் உயிரிழப்பு

Updated On : 20 ஜூலை 2024, 11:51 pm IST
பகிர்:

புழல் அருகே லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

சென்னை கொடுங்கையூா் முத்தமிழ் நகா் பகுதியை சோ்ந்தவா் பாா்வதி (60). இவா் திருமண தரகராவாா். வெள்ளிக்கிழமையன்று புழல் காவாங்கரை ஜிஎன்டி சாலையை கடக்க முயன்றபோது மாதவரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற லாரி பாா்வதி மீது மோதியது. இந்த விபத்தில் பாா்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் விரைந்து வந்து பாா்வதி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்தை ஏற்படுத்திய, லாரி ஓட்டுநா் கள்ளக்குறிச்சியை சோ்ந்த நாராயணன் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments