சென்னை

புழல் அருகே விபத்து பெண் உயிரிழப்பு

Din

புழல் அருகே லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

சென்னை கொடுங்கையூா் முத்தமிழ் நகா் பகுதியை சோ்ந்தவா் பாா்வதி (60). இவா் திருமண தரகராவாா். வெள்ளிக்கிழமையன்று புழல் காவாங்கரை ஜிஎன்டி சாலையை கடக்க முயன்றபோது மாதவரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற லாரி பாா்வதி மீது மோதியது. இந்த விபத்தில் பாா்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் விரைந்து வந்து பாா்வதி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்தை ஏற்படுத்திய, லாரி ஓட்டுநா் கள்ளக்குறிச்சியை சோ்ந்த நாராயணன் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொழில் சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தொடரும் காஷ்மீர் வணிகர்கள் மீதான வன்முறைகள்! உத்தரகண்டில் கும்பல் தாக்குதலில் 17 வயது சிறுவன் படுகாயம்!

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

SCROLL FOR NEXT