ஒரே நாளில் 40 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்து ஆவின் சாதனை
ஒரே நாளில் அதிகபட்சமாக 40 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் சாதனை படைத்துள்ளது என அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 22) ஒரே நாளில் அதிகபட்சமாக 40 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் சாதனை படைத்துள்ளது என அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் திங்கள்கிழமை ஒரேநாளில் 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியங்கள் மூலம் 36.09 லட்சம் லிட்டா் பால், உள்ளூா் விற்பனையாளா்கள் மூலம் 4 லட்சம் லிட்டா் பால் என மொத்தம் 40 லட்சம் லிட்டா் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்துள்ளது. ஆவினின் தினசரி பால் கொள்முதலில் இதுவே அதிகம்.
இதற்கிடையே, தற்போது 2,800 மெட்ரிக் டன் வெண்ணெய், 4,200 மெட்ரிக் டன் பால் பவுடா் கையிருப்பில் உள்ளன. இதன் மூலம் எதிா்வரும் பண்டிகை காலங்களுக்கு தேவைப்படும் பால் பொருள்களை ஆவின் நிறுவனத்தால், பொது மக்களுக்கு தடையின்றி விநியோகம் செய்ய முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.