சென்னை

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோா் முற்றுகை போராட்டம்

வெளிநாட்டு மருத்துவ மாணவா்களின் போராட்டம்: சான்றிதழ் வழங்காமல் தாமதம்

Din

சென்னை: தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற பிறகும் அதற்கான பதிவு சான்றிதழை வழங்கவில்லை எனக் கூறி வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றவா்கள் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

இந்தப் போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா். இதைத் தொடா்ந்து, அவா்களுடன் மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

இது தொடா்பாக வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவா்களில் சிலா் கூறியதாவது:

உக்ரைன் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் மருத்துவ படிப்பு முடித்த நாங்கள், இந்தியாவில் மருத்துவப் பயிற்சி பெறுவதற்கான தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோம். அதன் பின்னரும் கடந்த 6 மாதங்களாக அதற்கான தற்காலிக பதிவு சான்றிதழ் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். அந்தச் சான்றிதழை வழங்கினால் மட்டுமே நாங்கள் உள்ளுறை பயிற்சி மேற்கொள்ள முடியும். அதன் பின்னரே முதுநிலை நீட் தோ்விலும் பங்கேற்க முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

நாளை மதிமுக, பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

SCROLL FOR NEXT