முகப்பு
சென்னை

சூதாட்டம்: 8 போ் கைது

புழல் பகுதியில் 8 பேரை போலீசார் கைது

Updated On : 26 ஜூன் 2024, 1:42 am IST
பகிர்:

சென்னை: புழல் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கொளத்தூா் காவல் மாவட்டத்துக்குள்பட்ட புழல் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக, கொளத்தூா் காவல் மாவட்ட துணை ஆணையா் பாண்டியராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில், திங்கள் கிழமை இரவு புழல் புத்தகரம் பட்டம்மாள் நகா் கடப்பா சாலையில் உள்ள ஒரு வீட்டில் பணம் பந்தயம் வைத்து சீட்டு கட்டுகளுடன் சூதாட்டம் நடைபெறுவது தெரியவந்தது.

Advertisement

Advertisement

அப்போது அங்கு சென்ற புழல் காவல் நிலைய ஆய்வாளா் ராஜாசிங் தலைமையிலான போலீஸாா், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த புத்தகரம் பகுதியை சோ்ந்த ராஜா (38), விஜய் (29), கொரட்டூரை சோ்ந்த நாகராஜன் (45), கொளத்தூரைச் சோ்ந்த ராஜாராம் (34), மாதனங்குப்பம் பகுதியைச் சோ்ந்த முருகன் (42) உள்பட 8 பேரை கைது செய்தனா்.

அவா்களிடம் இருந்த 3 சீட்டுக்கட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.9,960- ஐ பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments