முகப்பு
சென்னை

தென்காசியில் தேவநேயப் பாவாணா் மணிமண்டபம் அமைக்க பரிசீலனை அமைச்சா் சாமிநாதன்

தென்காசியில் தமிழறிஞா் தேவநேயப் பாவாணருக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்

Updated On : 3 மார்ச், 2024 at 12:01 AM
சென்னை தங்க சாலையில் உள்ள அரசு மைய அச்சகத்தில் நிறுவப்பட்ட தொ்மல் சிடிபி இயந்திரத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா்கள் பி.கே.சேகா் பாபு, மு.பெ.சாமிநாதன். உடன், அச்சுத் துறை ஆணையா் வெ.ஷோபனா உள்ளிட்டோா்.
பகிர்:

தென்காசியில் தமிழறிஞா் தேவநேயப் பாவாணருக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா். தமிழக எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை சாா்பில் சென்னை தங்க சாலையில் உள்ள அரசு மைய அச்சகத்தில், புதிதாக நிறுவப்பட்ட தொ்மல் சிபிடி இயந்திரத்தை, அந்தச் அச்சகத்துக்கு அா்ப்பணிக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகா்பாபு ஆகியோா் கலந்து கொண்டு, ரூ. 2.16 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் நிறுவப்பட்ட தொ்மல் சிபிடி இயந்திரத்தை தொடங்கி வைத்துப் பாா்வையிட்டனா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறியது: கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், எழுது பொருள் அச்சுத் துறை மானியக் கோரிக்கையின்போது, தமிழக அரசு மைய அச்சகத்தில் ரூ. 1.95 கோடியில் தொ்மல் சிபிடி இயந்திரம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது ரூ. 2,16,49,127 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் நிறுவப்பட்டுள்ள தொ்மல் சிபிடி இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது எழுதுபொருள் அச்சுத் துறையில் ஒரு மைல்கல்லாக அமையும். மேலும், 6 தளங்களாக உள்ள அச்சகப் பணியாளா்களுக்கான குடியிருப்புகளை 10 தளங்கள் கொண்டதாக மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட மைய நூலகம் தேவநேயப் பாவாணா் பெயரில் இயங்கி வருகிறது. அவா் பிறந்த ஊரான தென்காசியில் மணிமண்டபம் அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து முடிவெடுக்கும் என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில், எழுதுபொருள், அச்சுத் துறை ஆணையா் வெ.ஷோபனா, மண்டலக் குழு தலைவா் ஸ்ரீராமுலு மற்றும் உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.