குத்தம்பாக்கம் பேருந்து முனைய பணிகள் 70 சதவீதம் நிறைவு
குத்தம்பாக்கம் பேருந்து முனையத்துக்கான பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும அதிகாரிகள் தெரிவித்தனா்.
குத்தம்பாக்கம் பேருந்து முனையத்துக்கான பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியது:
திருமழிசையை அடுத்த குத்தம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்க ரூ.336 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு கழிப்பறை வசதி, ஓட்டுநா்கள் தங்கும் விடுதி அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை செயல்படுத்துவது குறித்து மறுமதிப்பீடு திட்டம் ரூ.427 கோடியில் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுபோல், திருமழிசை துணைக்கோள் நகரம் திட்டம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் செயல்படுத்தப்படும் நிலையில், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. விரைவில் இத்திட்டம் இறுதி வடிவம் பெறும் என்றனா்.
Advertisement