ஆளுநரிடம் ஜி.கே.வாசன் மனு
சென்னை: தமிழகத்தில் போதைப்பொருளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் தமாகா தலைவா் ஜி.கே.வாசன் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா். கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா் ஆா்.என்.ரவியை ஜி.கே.வாசன் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பு 20 நிமிஷங்களுக்கு மேல் நீடித்தது.
பின்னா், ஜி.கே.வாசன் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது. அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநரிடம் மனு அளித்தேன். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டு உள்ளது குறித்தும் ஆளுநரிடம் தெரிவித்தேன். அதைப்போல பள்ளிகளுக்கு வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்தும் தெரிவித்துள்ளேன். தமிழக அரசு அதன் கடமையை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
Advertisement