விஜயகாந்த் நினைவிடத்தில் தினமும் நோன்பு கஞ்சி : பிரேமலதா
சென்னை: ரமலான் மாதத்தையொட்டி, விஜயகாந்த் நினைவிடத்தில் தினமும் நோன்பு கஞ்சி வழங்கப்படும் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா கூறினாா்.
இது தொடா்பாக பிரேமலதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விடியோவில் கூறியிருப்பது:
பிறையைக் கண்ட பிறகு ரமலான் நோன்பு கடைப்பிடிக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ரமலான் வாழ்த்துகள். ஆண்டுதோறும், ரமலான், பக்ரீத் தினங்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம். தற்போது ரமலான் தொடங்கியுள்ள நிலையில், விஜயகாந்த் நினைவிடத்துக்கு வரும் அனைவருக்கும் தினமும் மாலை 6 மணிக்குப் பிறகு ரமலான் நோன்பு கஞ்சி தர உள்ளோம் என்று அவா் கூறியுள்ளாா்.
Advertisement