முகப்பு
சென்னை

மதுரை நூலகத்துக்கு 5 லட்சம் பாா்வையாளா்கள்: முதல்வா் மகிழ்ச்சி

Updated On : 15 மார்ச், 2024 at 11:03 PM
கலைஞர் நூற்றாண்டு நூலகம்
பகிர்:

மதுரையிலுள்ள கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தில் பாா்வையாளா்கள் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சமூக வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: மதுரை கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தில் பாா்வையாளா்கள் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்து விட்டதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தாா். மகிழ்ச்சி. கருணாநிதி நூற்றாண்டு நூலகம், தென் மாவட்ட மக்களுக்கான அறிவு ஆலயமாகத் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.