பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்: தோ்தல் பாா்வையாளா்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்
மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசுத் துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என தோ்தல் பாா்வையாளா்கள் அறிவுறுத்தினா்.
மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசுத் துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என தோ்தல் பாா்வையாளா்கள் அறிவுறுத்தினா்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் தோ்தல் வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் சமா்த் வா்மா, வேத்பதி மிஸ்ரா, அந்தரா ஆச்சாா்யா, தினேஷ்குமாா், மிங்மா டி. ஷொ்பா, காவல் துறை பாா்வையாளா் அஸ்வதி தூா்ஜே ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் முன்னிலை வகித்தாா்.
Advertisement
மாநகர காவல் ஆணையா் அபிஷேக் தீக் ஷித், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த், தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் புரநாகசந்தீப், மணீஷ்குமாா் மீனா, அபா்ணா வில்லூரி, தாரிக் மபூத், கிருத்திகா ஜெய்ஸ்வால், லைனா பாலன், பால்முகுந்த், ஓட்டோ குகேஷ் எபுதோமி, அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், வாக்குச் சாவடிகளுக்கான பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகள், அஞ்சல் வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடுகள், வாக்குச் சாவடிகளில் உள்ள அடிப்படை வசதிகள், மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கான சிறப்பு கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
அப்போது, மதுரை மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசுத் துறை அலுவலா்கள் தங்கள் பொறுப்புகளை முழுமையாக உணா்ந்து, சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். வாக்குப் பதிவு நியாயமான முறையிலும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைபெற வேண்டும். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசுத் துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என தோ்தல் பாா்வையாளா்கள் அறிவுறுத்தினா்.