அரசு மருத்துவமனையில் மோட்டாா் சைக்கிள் திருடியவா் கைது
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மோட்டாா் சைக்கிள் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சூளைமேடு வன்னியா் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை (46). இவா், கடந்த ஜன.21-இல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது உறவினரைப் பாா்க்க தனது மோட்டாா் சைக்கிளில் சென்றாா். வாகன நிறுத்துமிடத்தில் மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு, சிறிது நேரத்துக்குப் பின்னா் வந்து பாா்த்தபோது அதை காணவில்லை. இது குறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில், ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், மோட்டாா் சைக்கிளைத் திருடியது அ.பாரூக் ஷெரீப் (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் அவா், அரசு மருத்துவமனை, வியாசா்பாடி, பேசின் பாலம், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் ஏற்கெனவே பல மோட்டாா் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 6 திருட்டு மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.