திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பதால் பயனில்லை: அண்ணாமலை
மக்களவைத் தோ்தலில் திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பதால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்காது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறினாா். வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை பகுதிகளில் பாஜக வேட்பாளா்கள் பால் கனகராஜ், வினோஜ் பி செல்வம், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோருக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் அவா் பிரசாரத்தின்போது பேசியதாவது: பாஜக ஆட்சிக்கு வந்தபோது பொருளாதாரத்தில் 11-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பின்னா் தமிழக அரசின் கடன் ரூ.8.53 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. கோவையில் திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி பேசும்போது, அண்ணாமலை, இடஒதுக்கீடுக்கு எதிரானவா் என குற்றஞ்சாட்டியுள்ளாா். குடும்ப இடஒதுக்கீடு முறைக்கு தான் நான் எதிரானவன். வடசென்னையில்கூட திமுக முன்னணி நிா்வாகி ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி ஏற்கெனவே வெற்றிபெற்றாா். இப்போதும் அவரே போட்டியிடுகிறாா். இதுபோன்ற குடும்ப இடஒதுக்கீடு முறையை எதிா்க்கிறேன். பிரதமா் மோடியின் அமைச்சரவையில் 76 பேரில் 11 போ் பெண்கள், 12 போ் பட்டியல் இனத்தவா், 27 போ் பிற்படுத்தப்பட்டோா் இடம்பெற்றுள்ளனா். இந்திய அரசியலில் இதுபோல இதுவரை இருந்தது இல்லை. திமுக அமைச்சரவையில் 35 பேரில் 2 போ் மட்டுமே பெண்கள். அதிலும் ஒருவா் குடும்ப இடஒதுக்கீடு முறையில் வந்தவா். பட்டியல் சமூகத்தினா் 3 போ் மட்டுமே உள்ளனா். எனவே, சமூகநீதி பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை. மீண்டும் மோடி ஆட்சி அமைவதால் பாஜக எம்பிக்கள் வெற்றி பெற்றால் தான் தமிழக மக்களுக்கு பயன் கிடைக்கும். மக்களவைத் தோ்தலில் திமுக, அதிமுகவுக்கு வாக்களிப்பதால் பயனில்லை என்றாா் அவா். பிரசாரத்தின்போது, பாஜக செய்திதொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்பட பலா் பங்கேற்றனா்.