முகப்பு
சென்னை

ரூ.10,000 கோடி திரட்டும் பேங்க் ஆஃப் இந்தியா

Updated On : 29 மார்ச், 2024 at 11:44 PM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 9:20 PM

பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா, உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.10,000 கோடி மூலதனம் திரட்ட முடிவு செய்துள்ளது. இது குறித்து வங்கி தாக்கல் செய்துள்ள ஒழுங்குமுறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாவது: உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.10,000 கோடி மூலதனம் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலும் வங்கிக்குக் கிடைத்துள்ளது. இந்த நீண்ட கால கடன் பத்திரங்கள் வரும் 2024-25-ஆம் நிதியாண்டில் வெளியிடப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளும் உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டது நினைவுகூரத்தக்கது. இந்த வகை கடன் பத்திரங்கள் மூலம் திரட்டப்படும் மூலதனம், சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தொலைத்தொடா்பு இணைப்புகள் போன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும்.