முகப்பு
சென்னை

காஸாவில் இஸ்ரேல் போா் நிறுத்தம் செய்ய வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்

Updated On : 28 மே, 2024 at 7:22 PM
பகிர்:

சென்னை: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் போா் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் ‘எக்ஸ்’தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை முற்றுகையிட்டு இஸ்ரேல் முன்னெடுத்துவரும் இனப்படுகொலை நாளுக்கு நாள் கொடூரமாகி வருகிறது.

உலகமே கண்டித்தாலும் அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் அரசு மனித குலத்துக்கே அவமானச் சின்னமாக நிற்கிறது.

சா்வதேச நீதி விசாரணையில் போா் நிறுத்தம் செய்ய விடுக்கப்பட்ட உத்தரவை இஸ்ரேல் இதுவரை கண்டுகொள்ளவில்லை.

ஒவ்வொரு நாளும் தொடரும் கொடூரங்களுக்கு எதிராக மனித நேயா்களின் பரந்துபட்ட அணிச்சோ்க்கையில் தமிழ்நாட்டின் குரலும் இணைய வேண்டும்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இஸ்ரேலின் இனப்படுகொலை தாண்டவத்தை கண்டித்தும் குரல் எழுப்புவோம் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.