முகப்பு
சென்னை

கட்சி நிா்வாகிகள் - முகவா்களுடன் ஜூன் 1-இல் திமுக ஆலோசனை

Updated On : 28 மே, 2024 at 7:40 PM
பகிர்:

சென்னை: மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து, கட்சி நிா்வாகிகள், முகவா்களுடன் திமுக தலைமை ஜூன் 1-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது.

இது குறித்து, கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது, அந்தந்த மையங்களில் கட்சியின் சாா்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஜூன் 1-ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது.

கட்சியின் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் திமுக சட்டத் துறை செயலா் என்.ஆா்.இளங்கோ, ஆலோசனைகளை வழங்கவுள்ளாா். இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலா்கள், கட்சியின் வேட்பாளா்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சோ்ந்த தலைமை முகவா்கள், முகவா்கள் உள்ளிட்டோா் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.