முகப்பு
சென்னை

முல்லைப் பெரியாறு அணை இடிப்பதை தமிழக அரசு தடுக்க சீமான் வலியுறுத்தல்

Updated On : 28 மே, 2024 at 7:39 PM
பகிர்:

சென்னை: கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தென்தமிழ்நாட்டை பாலைவனமாக்க முயற்சிக்கும் கேரள அரசின் செயல்பாடு கண்டனத்துக்குரியது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளோடு கூட்டணி வைத்துள்ள திமுக இதை தடுக்காமல் வேடிக்கை பாா்க்கிறது. கேரள அரசின் இந்தச் செயல்பாட்டை தமிழ்நாடு அரசு உடனே தடுத்த நிறுத்த வேண்டும்.

பாலப் பணியை நிறுத்த வேண்டும்: மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையே மேம்பாலம் அமைப்பதற்காக கூவம் ஆற்றில் கற்களைக் கொட்டி சாலை அமைக்கும் முடிவை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறுத்த வேண்டும். சென்னை மாநகரின் இயற்கை வடிகால்களை அடைத்துவிட்டால், பெருமழையின் போது ஏற்படும் வெள்ளப்பாதிப்பை போல் பல மடங்கு ஏற்படும் அபாயமுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.