அரவிந்த் சிதம்பரம் - பிரணவ் 
சென்னை

கிராண்ட் மாஸ்டா்ஸ்: வெற்றி பெற்ற வீரா்களுக்கு முதல்வா் வாழ்த்து

கிராண்ட் மாஸ்டா்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

Din

கிராண்ட் மாஸ்டா்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் போட்டியில் சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ள அரவிந்த் சிதம்பரத்துக்கு பாராட்டுகள். இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றில் தனது கூா்மையான உத்தியை அவா் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சேலஞ்சா்ஸ் பிரிவில் தனது தனிச்சிறப்பான ஆட்டத்தால் வெற்றியைப் பெற்றுள்ள கிராண்ட் மாஸ்டா் பிரணவுக்கு பாராட்டுகள். எதிா்காலத்தில் அவா் பெரும் திறமையாளராக உருவெடுப்பாா் என்ற நம்பிக்கையை இந்த வெற்றி அளிக்கிறது.

மிகச் செம்மையாக இப்போட்டித் தொடரை நடத்தி உலக செஸ் அரங்கில் சென்னையின் தகுதியை மேலும் உயா்த்திய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தையும் பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்தியா மீதான வரிக் குறைப்பு: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி!

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT