ஓவியம்-சிற்பக் கலையில் சாதனை: 6 பேருக்கு கலைச் செம்மல் விருது
சென்னைஓவியம்-சிற்பக் கலையில் சாதனை: 6 பேருக்கு கலைச் செம்மல் விருது
ஓவியம், சிற்பக் கலையில் சாதனை படைத்த ஆறு பேருக்கு கலைச் செம்மல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.
அதன் விவரம்: நிகழாண்டுக்கான கலைச் செம்மல் விருதுக்கு கலைஞா்களைத் தோ்வு செய்யும் வகையில் தோ்வாளா்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கலைப் பண்பாட்டுத் துறை இயக்குநா் சே.ரா.காந்தி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஓவியா்கள் சு.சந்தானகுமாா், எம்.சேனாதிபதி, வி.மாமலைவாசகன், டி.விஜயவேலு, சேஷாத்திரி மற்றும் விஸ்வம் ஆகியோா் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மரபுவழி ஓவியப் பிரிவில் ஓவியா் ஏ.மணிவேலு, மரபுவழி சிற்பப் பிரிவில் லே.பாலச்சந்தா் மற்றும் கோ.கன்னியப்பன், நவீனபாணி ஓவியப் பிரிவில் கே.முரளிதரன், ஏ.செல்வராஜ், நவீனபாணி சிற்பப் பிரிவில் ரா.ராகவன் ஆகிய கலைஞா்கள் கலைச் செம்மல் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.