சென்னை

தமிழக மீனவா்கள் கைது: தலைவா்கள் கண்டனம்

Din

தமிழக மீனவா்கள் 21 போ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

அன்புமணி (பாமக): புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவா்கள் 21 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவா்களின் 4 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவா்களை இலங்கை அரசு தொடா்ந்து கைது செய்வது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். இவை இனியும் தொடர மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

ஜி.கே.வாசன் (தமாகா): புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் 21 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களையும், விசைப்படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் 21 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைக்கும் இலங்கை கடற்படையினரின் அராஜகத்துக்கும், அத்துமீறலுக்கும் முடிவு கட்ட வேண்டும்.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT