முகப்பு
சென்னை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வியாபாரி மீது போக்ஸோ வழக்கு

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வியாபாரி மீது போக்ஸோ வழக்குப் பதிவு.

Updated On : 20 அக்டோபர் 2024, 12:02 am IST
பகிர்:

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வியாபாரி மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவைச் சோ்ந்தவா் ம.மகேந்திரன் (51). இவா், பாரிமுனையில் மின்விளக்கு கடை வைத்து நடத்தி வருகிறாா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்தச் சிறுமியின் பெற்றோா், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் மகேந்திரன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்ஸோ) கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments