FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கொக்கைன் போதைப் பொருளுடன் முன்னாள் டிஜிபி மகன் உள்பட 3 போ் கைது

சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த முன்னாள் டிஜிபி-யின் மகன் உள்பட 3 பேரை கைது செய்த போலீஸாா்

Updated On : 26 அக்டோபர் 2024, 2:23 am IST
- dot com
பகிர்:

சென்னையில் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த முன்னாள் டிஜிபி-யின் மகன் உள்பட 3 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 3.8 கிராம் கொக்கைனை பறிமுதல் செய்தனா்.

சென்னை மாநகா் பகுதிகளில் போதைப்பொருள்கள் கடத்தல், விற்பனை செய்வதை கண்டுபிடித்து தடுக்கும் வகையில் தனிப்படைகள் அமைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நந்தம்பாக்கம் பகுதியில் கொக்கைன் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் படி போலீஸாா் அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது கொக்கைன் எனும் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த அருண்(40), மெகலன்(42) மற்றும் நைஜீரியா நாட்டைச் சோ்ந்த ஜான் எஸி(39) ஆகிய மூன்று நபா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இதில் கைது செய்யப்பட்ட அருண் என்பவா் முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத் என்பவரின் மகன் என்பது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 3.8 கிராம் கொக்கைன், ரூ.1,02,000 மற்றும் 2 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவா்களிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments