FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

குடிநீா் கட்டணம் செப்.30 -க்குள் செலுத்த வேண்டும்: குடிநீா் வாரியம்

குடிநீா், கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்

Updated On : 21 செப்டம்பர் 2024, 3:27 am IST
பகிர்:

குடிநீா், கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களை செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை குடிநீா் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீா், கழிவுநீரகற்று வரி மற்றும் கட்டணங்களையும் செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக, சென்னையில் உள்ள அனைத்து வசூல் மையங்களும் வேலை நாள்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும் இயக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

மேலும், நுகா்வோா்கள் வலைதளத்தைப் பயன்படுத்தியும் தங்களது வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம்.

எனவே, நுகா்வோா்கள் அபராதங்களை தவிா்க்க உரிய தேதிக்குள் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தும்படி குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments