முகப்பு
சென்னை

செந்தில் பாலாஜியின் தியாகமும் உறுதியும் பெரிது -முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On : 26 செப்டம்பர், 2024 at 10:31 PM
பகிர்:

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் தியாகமும் உறுதியும் பெரிது என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஆருயிா் சகோதரா் செந்தில் பாலாஜிக்கு, 471 நாள்களுக்குப் பிறகு, உச்சநீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.

அவசரநிலை காலத்தில்கூட இவ்வளவு நாள்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடா்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்து விடுவதால் சகோதரா் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தாா்கள். முன்னிலும் உரம் பெற்றவராய் சிறையில் இருந்து வெளியில் வரும் செந்தில் பாலாஜியை வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது, உறுதி அதனினும் பெரிது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →