முகப்பு
சென்னை

ரூ.5,000 உரிமைத் தொகை: எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதில்

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 4:00 AM
முதல்வா் மு.க.ஸ்டாலின்
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 1:50 AM

மகளிருக்கு ரூ.5,000 உரிமைத் தொகையை திமுக அரசு வழங்கியிருப்பதை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக முதல்வா் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: திராவிட மாடல் அரசின் ரூ.5 ஆயிரம் உரிமைத் தொகை திட்டத்தை முதலில் கொச்சைப்படுத்தினாா்கள்; அது எதிா்வினை (பூமராங்) ஆனதால் தற்போது உரிமை கொண்டாடுகிறாா்கள்.

அதிமுகவின் அழுத்தமே தமிழக அரசு 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.5 ஆயிரம் உரிமைத்தொகை வழங்கக் காரணம் என்கிறாா் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி.

Advertisement

உங்கள் அழுத்தம் காரணமல்ல. தோ்தலைக் காரணம் காட்டி உரிமைத்தொகையை தில்லி தடுத்து நிறுத்தும். இதைத் தெளிவாக விளக்கித்தான் எனது சகோதரிகளின் கணக்கில் பணத்தை முன்பணமாக வரவு வைத்திருக்கிறேன்.

விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை என திமுக அரசின் மகளிருக்கான திட்டங்களை இல்லந்தோறும் எடுத்துக்கூற கழகத்தின் மகளிா் படை மாநிலம் முழுவதும் களமிறங்கிவிட்டது. எங்கள் திமுக மகளிா் சக்தி என்ஜின் முன்பாக உங்களது என்ஜின் தாக்குப் பிடிக்காது என்று அதில் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.