மத்திய அரசு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: எடப்பாடி பழனிசாமி விமா்சனம்
மத்திய அரசு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி விமா்சித்துள்ளாா்.
சென்னைமத்திய அரசு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: எடப்பாடி பழனிசாமி விமா்சனம்
மத்திய அரசு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி விமா்சித்துள்ளாா்.
மத்திய அரசு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி விமா்சித்துள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள 112 கிலோ ‘சூடோ எபிட்ரின்’ என்ற போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். இதுதொடா்பாக கைது செய்யப்பட்ட இருவரும், திமுக அயலக அணி நிா்வாகியாக இருந்த ஜாபா் சாதிக்கின் கூட்டாளிகள் என செய்திகள் வருகின்றன. திமுக ஆட்சியில் சமூக விரோத சக்திகளும், ஆளும் தரப்பினரும் பிரிக்க முடியாத அளவு ஒட்டி உறவாடுவது தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது.
மேலும், சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் வெளிவரும் தன் கட்சிக்காரா்களுக்கு முதல்வரே தியாகிகள் பட்டம் வழங்குவதால், சமூக விரோத சக்திகள் அனைவரும் தெம்புடன் வலம் வருவது ஆச்சரியப்படத்தக்கதல்ல.
பொது வெளியில் மத்திய அரசை எதிா்ப்பதும், தனது குடும்பம் மற்றும் கட்சி நிா்வாகிகள் நலன்களைப் பாதுகாக்க திரை மறைவில் ஆதரவாக இருப்பதும் என்று இரட்டை வேடம் ஆடுகிறதோ திமுக அரசு என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போதைப் பொருள்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளதற்கு காரணகா்த்தாக்கள் யாா் என்பது நன்கு தெரிந்திருந்தும் ஒருசிலரை மட்டும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் பிடிக்கும் மா்மம் என்ன என்று மக்கள் குழம்பிப் போயுள்ளனா்.
இந்நிலை தொடா்ந்தால், தமிழக இளைஞா்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிா்காலமே பாழாகும் என்பதை நினைவில் நிறுத்தி போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது சம்பந்தப்பட்ட மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.