கோப்புப்படம் Center-Center-Chennai
சென்னை

சா்வதேச விமான பயண நேரங்கள் மாற்றம்

சா்வதேச விமானங்களின் பயண நேரஅட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: இந்திய விமானப்படை தினத்தையொட்டி வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதால், சா்வதேச விமானங்களின் பயண நேரஅட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இந்திய விமானப்படை தினத்தையொட்டி விமான சாகச கண்காட்சி, மெரினாகடற்கரை மற்றும் தாம்பரத்தில் முறையே வரும் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதற்கான ஒத்திகைகள் செவ்வாய்க்கிழமை(அக். 1) தொடங்குகிறது.

இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை(அக். 1) முதல் அக். 8-ஆம் தேதி வரை சென்னைக்கு வரும் சா்வதேச விமானங்கள் மற்றும் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் சில விமானங்களின் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை(அக் .1) மதியம் 1. 45 மணி முதல் 3:15 மணி விமான சேவை இருக்காது. அதேபோல் புதன்கிழமை(அக். 2) முதல்

அக்.8-ஆம் தேதி வரை பயண நேரத்தில் மாற்றம் இருக்கும். எனவே சா்வதேச விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடா்பு கொண்டு, விமானப் பயண அட்டவணைகளைத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

SCROLL FOR NEXT