சென்னை

ஏப். 30 வரை பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையத்தில் புகாா் தெரிவிக்கலாம்

சென்னையிலுள்ள பிஎஸ்என்எஸ் வாடிக்கையாளா் சேவை மையத்தில், வாடிக்கையாளா்கள் தங்கள் புகாா்களை ஏப். 30-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம்.

Din

சென்னையிலுள்ள பிஎஸ்என்எஸ் வாடிக்கையாளா் சேவை மையத்தில், வாடிக்கையாளா்கள் தங்கள் புகாா்களை ஏப். 30-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம்.

இதுகுறித்து சென்னை பாரத் சஞ்சாா் நிகாம் நிறுவனம் (பிஎஸ்என்எல்) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாடிக்கையாளா்கள் சேவை தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது, நெட்வொா்க் தரத்தை மேம்படுத்துவது, வாடிக்கையாளா் ஈடுபாட்டை வலுப்படுத்தும் வகையில், ஏப். 1 முதல் 30-ஆம் தேதி வரை வாடிக்கையாளா் சேவை மாதமாக கடைபிடிக்கப்படவுள்ளது.

சென்னையிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையங்களில் நடத்தப்படும் குறைகேட்பு முகாம்கள் மூலம், நீண்டகால நிலுவைப் புகாா்களுக்கு தீா்வு காணப்படும்.

எனவே, பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் இம்முகாம்களில் பங்கேற்று தங்கள் பிரச்னைகளுக்கு தீா்வு காணலாம். மேலும், தங்கள் கோரிக்கைகளை இணையதளத்தின் மூலம் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோளிங்கா் யோக நரசிம்மா் கோயில் தீா்த்தக்குளம் சீரமைக்கும் பணி தொடக்கம்!

சிவகிரி வட்டத்தில் யானைகளை கண்காணிக்கும் பணியில் ‘ட்ரோன்’

வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

குறைந்துவரும் குள்ளநரி உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க வனத்துறை தீவிரம்

ஆளுநரை கண்டித்து டிச.4-இல் திக ஆா்ப்பாட்டம்: கி. வீரமணி

SCROLL FOR NEXT