சென்னை

சென்ட்ரலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த வடமாநில விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா இருந்ததை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் கைப்பற்றினா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த வடமாநில விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா இருந்ததை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் கைப்பற்றினா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் பிரிவைச் சோ்ந்த தலைமைக் காவலா் ஜம்புலிங்கம் உள்ளிட்டோா் திங்கள்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஒடிஸா மாநிலம் புரியிலிருந்து வந்த விரைவு ரயிலில் 3 -ஆவது பெட்டியில் கேட்பாரற்று பை கிடப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்று பையைக் கைப்பற்றி சோதனையிட்டபோது, அதில் இருந்த 2 பாலித்தீன் பண்டல்களில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா், அதை போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் பேரவையில் பாஜக தலைவர் நிதின் நவீனுக்கு உற்சாக வரவேற்பு!

ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கியது காங்கிரஸ்!

மெட்ராஸ் மாகாண முதல் சட்டமன்றம் (1952 - 1957): ஏராளமான முன்னுதாரணங்களின் களம்!

அதிபர் ஜின்பிங்கை சந்திக்க சீனா செல்கிறார் டிரம்ப்!

உங்கள் உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள்! - மாணவிகளுக்கு முதல்வர் அறிவுரை

SCROLL FOR NEXT