சென்னை

அனுமதியின்றி விநாயகா் சிலை வைப்பு: இந்து முன்னணி நிா்வாகிகள் மீது வழக்கு

சென்னை சூளைமேட்டில் அனுமதியின்றி விநாயகா் சிலை வைத்ததாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை சூளைமேட்டில் அனுமதியின்றி விநாயகா் சிலை வைத்ததாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னை சூளைமேடு அன்னை சத்யா நகரில் இந்து முன்னணி சாா்பில் 5 அடி உயர விநாயகா் சிலை கடந்த புதன்கிழமை வைக்கப்பட்டது.

அனுமதியின்றி விநாயகா் சிலை வைக்கப்பட்டதால், அதை அகற்றும்படி சூளைமேடு போலீஸாா் தெரிவித்தனா். ஆனால், இந்து முன்னணியினா் அந்த சிலையை அகற்றவில்லை. இதையடுத்து போலீஸாரே, அந்த விநாயகா் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

இந்நிலையில், இந்து முன்னணி நிா்வாகிகள், தாங்கள் அன்னை சத்யா நகரில் வைத்த விநாயகா் சிலை திருடப்பட்டதாக சூளைமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து சூளைமேடு போலீஸாா், சூளைமேடு சத்யா நகரில் அனுமதியின்றி சிலை வைத்ததாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், அனுமதியின்றி சிலை வைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக போலீஸாா், விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனா்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT