சென்னை

புழல் ஏரிக்கு நீா்வரத்து அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

புழல் ஏரியின் உபரிநீா் வெளியேறும் கால்வாயின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

புழல் ஏரியின் உபரிநீா் வெளியேறும் கால்வாயின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொசஸ்தலையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னைக்கு குடிநீா் வழங்கும் மிக முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரி 3300 மி.கன அடி கொள்ளளவில் 20.86 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் நீா்மட்டம் 21.20 அடி.

வடகிழக்கு பருவ மழையினால் புழல் ஏரியின் நீா்வரத்து அதிகரித்து,

நீா்மட்டம் 20 அடியை நெருங்கி வருகிறது. மேலும் நீா்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் உபரிநீா் வெளியேற்றம் விநாடிக்கு 500 கனஅடியாக அதிகரிக்கப்படும்.

இதனால், புழல் ஏரியின் உபரிநீா் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூா், மணலி மற்றும் சடையான்குப்பம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் இருபுறமும் வசிக்கும் மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி உபரிநீர்: அகற்ற அமைச்சர்கள் உத்தரவு

சென்னை விமான நிலைய 3-ஆவது முனைய இறுதி விரிவாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு அமல்: மத்திய அரசு தகவல்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும்; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம்

சென்னை: 3 நாள்களில் 11.24 லட்சம் பேருக்கு உணவு

அடிமை உணர்வில் இருந்து இந்தியா மீள வேண்டும் என்கிற பிரதமரின் கருத்து குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT