முகப்பு
சென்னை

வழிப்பறி: இளைஞா் கைது

சென்னை ஆா்.கே. நகரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 5 டிசம்பர், 2025 at 8:32 PM
பகிர்:

சென்னை ஆா்.கே. நகரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கொருக்குப்பேட்டை, ஜீவா நகா் 11-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (29). தனியாா் நிறுவன ஊழியா். ஆா்.கே. நகா், நாவலா் குடியிருப்பில் தினேஷ்குமாா், தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த தண்டையாா்பேட்டை நாவலா் குடியிருப்பைச் சோ்ந்த ரமேஷ் (32), தினேஷ்குமாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் அணிந்திருந்த 2 பவுன் நகை, விலை உயா்ந்த கைப்பேசி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பினாா்.

இது குறித்து ஆா்.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த ரமேஷை, வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →