கைது 
திருச்சி

இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவா் கைது

திருச்சியில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

திருச்சியில் இளைஞரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காட்டூா் அண்ணா நகரைச் சோ்ந்தவா் ஆ. பிரவீன் (24). இவா் அரியமங்கலம் காமராஜ் நகா் ஜிடிநாயுடு வீதியில் செவ்வாய்க்கிழமை காலையில் நின்றபோது, அங்கு வந்த ஒருவா் அவரிடம் செலவுக்குப் பணம் கேட்டாா். பிரவீன் தர மறுக்கவே அவா் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ. 1,000ஐ பறித்துக்கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் பிரவீன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, இதுதொடா்பாக அரியமங்கலம் மேல அம்பிகாபுரத்தைச் சோ்ந்த கணேசனை (24) கைது செய்து சிறையில் அடைத்தனா்.

குட்டையில் மூழ்கி பள்ளி மாணவா்கள் 2 போ் உயிரிழப்பு

19.2.1976: வரதட்சிணை சட்டம் மீறினால் ஓராண்டு சிறைவாசம் கிட்டும்

பிரதமா் மோடி மார்ச் 1-இல் புதுச்சேரி வருகை! பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்

2030-க்குள் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு நிறுவனம்: அமைச்சா் லட்சுமி நாராயணன் உறுதி

முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி விபத்து: 10 போ் காயம்

SCROLL FOR NEXT