சென்னை

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு! வைரல் விடியோ!

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

திருவான்மியூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம், தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை, ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம், தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிய இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை, சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்ட ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார், சுமார் நான்கு மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.

ரயில்வே காவல் துறை அதிகாரிகளின் அதிரடி உத்தரவின் பேரில் நான்கு மணி நேரத்தில் குற்றவாளியைப் பிடித்து கைது செய்தனர்

பின்னர் காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் பாபுஜி (28) என்பதும் ஏற்கனவே திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்க உள்ளனர்.

Railway Protection Force police have arrested a youth who was involved in snatching a gold chain from a woman sitting at the Thiruvanmiyur railway station.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT